Friday, December 3, 2010

இனிய கானங்கள்



பெண்கள் மனதை வெளிபடுத்தும் பாட்டு, அதுவும் பெண் பாடிய பாட்டு, அதுவும் பெண் குரலிலேயே இருக்கிற பாட்டு, அதுவும் பத்து பாட்டு பாடவேண்டுமென்ற தொடர் பதிவுக்கு தோழி ஆசியா அழைத்து இருக்கின்றார்.மிகவும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இப்பதிவை சற்று மெனக்கெட்டு பதிவு செய்கின்றேன்.ஆயிரம்தான் புதிய பாடல்கள் வந்து போனாலும் பழைய கானம் காலத்தால் அழியாதது.நாம் பிறக்கும் முன்னர் வெளிவந்த படத்தினைக்கூட ரசிக்கத்தூண்டும் வண்ணம் அமுதமாக காதில் வந்து பாயும் நான் ரசித்த,ரசிக்கும் பாடல்களை நீங்களும் கேட்டு மகிழ்ந்து கருத்தும் ஓட்டும் இட்டு விட்டு செல்லுங்களேன்.

எல்.ஆர் ஈஸ்வரியின் கணீர் குரல் என்றுமே எனக்கு பிடிக்கும்.ஆஹா..கேட்க கேட்க மனதில் உற்சாகமல்லவா பிறக்கும்.

1.துள்ளுவதோ இளமை
தேடுவதோ தனிமை
அள்ளுவதோ இனிமை
அத்தனையும் புதுமை



2.எல்.ஆர் ஈஸ்வரி ஹஸ்கி வாய்ஸில் பாடும் விடிவெள்ளி படத்தில் வரும் அற்புதமான பாடல்.எப்பொழுது கேட்டாலும் செய்யும் வேலைகளை ஒத்திப்போட்டு விட்டு லயித்து கேட்டு மகிழும் பாடல் இது.

காதோடுதான் நான் பாடுவேன்
மனதோடுதான் நான் பேசுவேன்
விழியோடுதான் விளையாடுவேன் -
உன் மடிமீதுதான் கண் மூடுவேன்

வளர்ந்தாலும் நான் இன்னும் சிறு பிள்ளைதான்
நான் அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்
உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா?
உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா?
குல விளக்காக நான் வாழ வழி காட்டவா?

காதோடுதான் நான் பாடுவேன்....

பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது
பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது
எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது
இதில் யார் கேட்டு என் பாட்டை முடிக்கின்றது


3.எல்.ஆர் ஈஸ்வரியின் பாடல்கள் எல்லாமே என்னைக்கவர்ந்தவைதான்.அதிலும் இந்த பாடலை உற்சாகமாக பாடி கேட்பவரையும் உற்ச்சாகத்திற்கு அழைத்து செல்லும் ரகசியம் எல் ஆர் ஈஸ்வரிக்கு கைவந்த கலை.கேளுங்கள்.மனதிற்குள் பூ பூக்கும்.

பட்டத்து ராணி பார்க்கும் பார்வை
வெற்றிக்குத்தான் என என்ன வேண்டும்
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை
வெற்றிக்குத்தான் என என்ன வேண்டும்
நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்
சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்
நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்
சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்

துடித்து எழுந்ததே
கொதித்து சிவந்ததே
கதை முடிக்க நினைத்ததே
நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்
சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்

நாடு கண்ட பூங்கொடி
காடு வந்த காரணம் ஒரு முறை எண்ணிப்பார்
தேடி வந்த நாடகம்
கூடி வரும் வேளையில் மறுபடி என்னைப்பார்
நாடு கண்ட பூங்கொடி
காடு வந்த காரணம் ஒரு முறை எண்ணிப்பார்
தேடி வந்த நாடகம்
கூடி வரும் வேளையில் மறுபடி என்னைப்பார்
வலை போட்டுப் பிடித்தாலும் கிடைக்காதது
துடித்து எழுந்ததே கொதித்து சிவந்ததே
கதை முடிக்க நினைத்ததே
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை
வெற்றிக்குத்தான் என என்ன வேண்டும்



4.இதுவும் பி.சுசீலா சோகம் இழையோட இழையோட பாடும் அழகிய பாடல்.

சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே
சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே
ஏன் ஏன் ஏன் என்னுயிரே
இன்னொரு கைகளிலே யார் யார் நானா
எனை மறந்தாயா ஏன் ஏன் ஏன் என் உயிரே
மங்கல மாலை குங்குமம் யாவும் தந்ததெல்லாம் நீதானே
மணமகளைத் திருமகளாய் நினைத்ததெல்லாம் நீதானே
என் மனதில் உன் மனதை இணைத்ததும் நீதானே
இறுதிவரைத் துணையிருப்பேன் என்றதும் நீதானே


5.பி.சுசீலாவின் கருத்தாழமிக்க பாடல்.குரலில் சோகம் இழையோட பாடும் பொழுது மனதை இறகால் வருடுவது போல் இருக்கின்றது.

நினைக்கத்தெரிந்த மனமே
உனக்கு மறக்கத்தெரியாதா?
பழகத்தெரிந்த உயிரே
உனக்கு விலகத்தெரியாதா


6.இதுவும் பி .சுசீலா பாடிய ஒரு அருமையான பாடல்.பாடலில் குரலை கொஞ்சலாக்கி அற்புதமாக பாடி அசத்துகின்றார்.

செல்லக்கிளியே மெள்ளப்பேசு
தென்றல் காற்றே அள்ளி வீசு


7.பி.சுசீலா பாடிய ஒரு அழகான கானம்.துணையின் பிரிவை ஏக்கத்துடன் எப்படி உருகிப்பாடுகின்றார் பாருங்கள்.

மாலைப் பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி
மணம் முடித்தவர் போல் அருகினிலே-ஓர்
வடிவு கண்டேன் தோழி
மங்கை என் கையில் குங்குமம் தந்தார்
மாலையிட்டார் தோழி
வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில்
சாய்ந்து விட்டேன் தோழி
அவர் மறவேன் மறவேன் என்றார் உடனே
மறந்து விட்டார் தோழி
மறந்து விட்டார் தோழி ஆஆஆஆஆ
மாலைப் பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி



8.எஸ் ஜானகி பாடிய மிக பிரபலாமான பாடல் 1970களில் அனைவரின் வாயிலும் முணுமுணுத்த பாடல்.அதில் சுஜாதாவின் எளிமையான நடனமும்,ஜானகியின் தேன் குரலும்,இளையராஜாவின் இசையும் சேர்ந்த ஒரு அற்புதமான கலவை.

மச்சானைப்பார்த்தீங்களா
மலைவாழைத் தோப்புக்குள்ளே,
குயிலக்கா கொஞ்சம்
நீ பார்த்துச்சொல்லு வந்தாரா பார்க்கலையே
அவர் வந்தாரா பார்க்கலையே


9.கன்னிப்பருவத்திலே என்ற படத்தில் எஸ் .ஜானகி உருகி,உருகிப்பாடி நம்மை உருக வைக்கும் பாடல் இது.

பட்டுவண்ண ரோசாவாம்
பார்த்தகண்ணு மூடாதாம்
10.வாணி ஜெயராம் பாடிய எனக்குமட்டுமல்ல பெண்கள் அனைவருக்கும் பிடித்த ஒரு பாடல்.இசையும் வாணிஜெயராமின் பாஸந்தி குரலும் சேர்ந்து..ஆஹா..அடடா...எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டு ரசிக்கலாம்.

மல்லிகை-என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ?
எந்நேரமும் உன்னாசைபோல்
பெண்பாவை நான் பூச்சூடிக் கொள்ளவோ?
வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
திங்கள்மேனியைத் தொட்டுத் தாலாட்டுது!
குளிர் காற்றிலே தளிர் பூங்கொடி!
கொஞ்சிப்பேசியே அன்னபப் பாராட்டுது
என் கண்ணன் துஞ்சத்தான்
என் நெஞ்சம் மஞ்சம்தான்
கையோடு நானள்ளவோ
என் தேவனே உன் தேவி நான்
இவ்வேளையில் உன் தேவை என்னவோ

இந்த தொடர் பதிவை

மேனகா

கீதாஆச்சல்

ஹுசைனம்மா


மின்மினி.

லக்ஷ்மி அம்மா

தேனம்மை

ராமலக்ஷ்மி

சாருஸ்ரீராஜ்

ஜலீலா

இலா

ஆகியோரை பதிவிட அழைக்கின்றேன்.மேற்கண்டவர்களின் பாடல் ரசனை எப்படி உள்ளது என்று அறிய ஆவல்.விரைவாக பதிவிடுங்கள் நட்புக்களே.

டிஸ்கி: பாடல்வரிகள் கொண்ட சிகப்புவண்ண எழுத்துக்களை கிளிக் செய்து பாடல்களை ரசியுங்கள்.




Wednesday, December 1, 2010

கோடீஸ்வரர்களின் வங்கி.





கணக்கு ஆரம்பிக்க தனி மேலாளர்

காஃபி ஷாப்

ஆடை மாற்றும் நவீன அறைகள்

ஓய்வெடுக்கும் அறைகள்

கான்ஃப்ரன்ஸ் அறைகள்

24 மணி நேர பாதுகாப்புப்பெட்டக வசதி.

பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து எடுத்த நகைகளை அங்கேயே அலங்கார அறையில் அமர்ந்து அலங்கரித்து வைபவங்களுக்கு சென்றுவிட்டு மீண்டும் அணிந்த நகைகளுடன் வங்கிக்கு திரும்பி பெட்டகத்தில் அணிந்திருக்கு நகைகளை கழற்றி வைக்கும் வசதி.

வாடிக்கையாளர்களை வீட்டுக்கே வந்து காரில் அழைத்து சென்று வேலை முடிந்ததும்
வீட்டிற்கு திரும்ப கொண்டு விடும் அளப்பறிய சேவை.

வரிகள், சார்ட்டர்ட் அக்கெளண்டன்ட் தொடர்பான உதவிகள்.

விரும்பினால் வாடிக்கையாளர்களின் இருப்பிடத்திற்கே நேரில் வந்து வங்கியின் சேவைகளை செய்து முடித்துத்தரும் ஊழியர்கள்.

வீடியோ கான்ஃப்ரன்ஸ் வசதி

வைஃபி வசதி

லிஸ்டைப்பார்த்து வியப்பாக உள்ளதா?வேறு எந்த நாட்டிலோ இந்த வங்கி அமையப்பெறவில்லை.நமது நாட்டிலேயேதான்.கசங்கிப்போன பத்து ரூபாய் நோட்டுகளை வைத்துக்கொண்டு கேஷ் கவுண்டரில் பணம் கட்ட கியூவில் நிற்கும் குப்பை பொறுக்கும் தொழிலாளியைக்கூட வாடிக்கையாளராக வைத்திருக்கும் அதே பாரதஸ்டேட் வங்கிதான் இப்படி ஒரு நட்சத்திரக்கிளையை ஹைதரபாத் நகரில் ஆரம்பித்து இருக்கின்றது.

கோடிகளில் புரள்பவர்களுக்கு மட்டுமே தொடங்கப்பட்ட இவ்வங்கி ஹைதராபாத் பஞ்ஞசரா ஹில்ஸ் பகுதியில் "கோஹினூர் பஞ்ஞசரா பிரிமியம் பேங்கிங் செண்டர்" என்ற பெயரில் 4000 சதுர அடி பரப்பளப்பளவில் இந்த ஒரே கிளைக்கு 80 லட்ச ரூபாயை செலவு செய்து நடச்சத்திர வங்கியை பணக்கற்றைகளில் நீச்சலடிக்கும் கோடீஸ்வரர்களுக்கு வலைவிரித்து இருக்கின்றது.குறிப்பாக ஹைதராபாத் நிஜாம் பகுதியில் வசிக்கும் கோடீஸ்வர்களான பழைய இஸ்லாமிய நவாபுகளை சுண்டி இழுக்கும் வண்ணம் இக்கிளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புகழ் பெற்ற வைரத்தை தன் பெயராக கொண்ட இவ்வங்கி பிஸினஸ் செண்டர்களுக்கு மாணிக்கம்,மரகதம் - Ruby and Emerald என்றும்,காஃபி ஷாப்புக்கு முத்து - pearl என்றும்,கான்ஃப்ரன்ஸ் ஹாலுக்கு நீலக்கல் - Sapphire என்றும்,பாதுகாப்பு பெட்டக அறைக்கு கோமேதகம் - Topaz என்றும் நவரத்தினக்களின் பெயர்களை சூட்டி அலங்கரித்து இருக்கின்றது.


இந்த வங்கில் கணக்கு வைத்துக்கொள்ள தகுதியான அம்சங்கள்.
1.பெரும் கோடீஸ்வரர் ஆக இருக்க வேண்டும்.

2.கோடீஸ்வரர் தான் என்று வங்கியே தீர்மானித்து வங்கி நிர்வாகமே வாடிக்கையாளருக்கு கணக்கு தொடங்க அழைப்பு விடுக்க வேண்டும்.

3.கணக்கு வைத்துக்கொள்ள குறைந்த பட்சத்தொகை ஜஸ்ட் ஒரு கோடி மட்டுமே.

4.ஹ்ம்ம்ம்ம்ம்....நமக்கும் தொலைத்தொடர்பில் ஒரு அமைச்சர் பதவியை போட்டு கொடுத்தாங்கன்னா ஒன்றென்ன ரெண்டு ,மூன்று அக்கவுண்டே இந்த வங்கியில் சுலபமாக திறந்து விடலாம்.



Thursday, November 18, 2010

அஞ்சறைப்பெட்டி



சாலைகளில் வழிநெடுகிலும் விளம்பர நிறுவனத்தினர் லட்சகணக்கில் செலவு செய்து வைக்கும் விளம்பரபோர்டுகளை மாநகராட்சி அத்தனையும் அகற்றி விளம்பரத்துறையினரை பெரும் நஷ்டத்துக்குள்ளாக்கி வருகின்றது என்பது கண் கூடாக காணும் அவலம்.இதற்கு விளம்பர போர்டுகள் இருப்பதால் விபத்துகள் நடந்தேறி வருகின்றது என்று கூறுகின்றனர்.வழி நெடுகிலும் சுவர்களில் கண்களையும் கருத்தையும் கவரும் விதம் அழகிய படங்களை வரைந்து அழகு படுத்துகிறேன் பேர்வழி என்று சிலருக்கு லாபம் கொடுத்து இருக்கின்றார்களே.அந்த சித்திரங்களால் விபத்து நடக்காதா என்ன?இல்லை இனி சாலைகளில் விளம்பர போர்டுகள் நிறுவப்படாமலே இருந்து விடுமா?


தமிழ்நாட்டில்,குறிப்பாக சென்னையில் ஆள் கடத்தல் சம்பவம் நிறைய நடகின்றது.இளைஞர்களையும் கடத்திப்போய் கோடிக்கணக்கில் பேரம் பேசுகின்றனர்.சமீபத்தில் நடந்தேறிய ஒரு தெரிந்த குடும்பத்திற்கு நேர்ந்த அவலம் மிகவும் வருந்ததக்கது.குற்றவாளிகளை பிடித்து அதிகபட்ச தண்டணை கொடுத்தால்த்தான் இது போன்ற அவலங்கள் நடந்தேறுவது குறையும்.

தியாகராயநகரில் இருக்கும் மன்னார்ரெட்டி தெருவில் ஒரு டாஸ்மாக் கடை.வழிநெடுகிலும் கையில் பாட்டிலும்,கிளாஸுமாக குடிமக்கள் பண்ணும் அலப்பரை,சண்டை நிகழ்வுகள் சகிக்க முடியவில்லை. போததற்கு சுண்டல் வண்டிகளும்,பஜ்ஜி வண்டிகளும் தெருவையே அடைத்துக்கொண்டு அந்த பகுதில் பெண்களும்,சிறுவர்களும் நடந்து செல்லவே அச்சப்பட வேண்டிய சூழ்நிலை.அங்கு குடி இருப்பவர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குறியது.இந்த தெருவில்மட்டுமல்ல சென்னையின் அநேகப்பகுதியில் இந்த அவலம் நடந்தேறி வருகின்றது.இன்னொரு கொடுமை என்னவென்றால் மிக பிரபலமான ஒரு மாலில் இதே கடையைக்கண்டு அதிர்ந்தேன்.அரசாங்கம் லாபம் பெறும் நோக்கத்திற்காக பொது மக்கள் இத்தனை அவஸ்தைப்பட வேண்டுமா?எப்பொழுது மனசாட்சி உள்ள அரசியல் வாதிகள் பிறப்பார்கள்?

எங்கள் வீட்டருகே அதிகம் பிரபலமில்லாத ஒரு தேசிய மயமாகப்பட்ட வங்கியின் கிளை சமீபத்தில் திறந்தனர்.அதில் கணக்கு வைத்துக்கொள்ள வேண்டி வங்கிக்கு சென்றேன்.தேவையான சில proof கள் எடுத்து சென்றுஇருந்தாலும் introducer இல்லாமல் புதிதாக கணக்கு தொடங்க இயலாது என்றார்.எனக்கு தெரிந்தவர்கள் யாரும் இல்லாததை எடுத்து சொன்னேன்.ஆனால் வங்கியின் மேலாளர் "அதுதான் ரூல்ஸ்" என்று அழுத்தமாக கூறிவிட்டார்."யாரவது கிடைத்தால் மீண்டும் வருகிறேன்" என்று கூறி அப்ளிகேஷனை வாங்கிக்கொண்டு திரும்பிய பொழுது பின்னால் இருந்து "மேடம் மேடம்.." என்ற குரல் கேட்டு திரும்பினேன்.ஒரு இளைஞர் "introducer கையெழுத்து வேண்டுமென்றால் நான் போட்டுகொடுக்கிறேன்.இதே பிராஞ்சில் நான் அக்கவுண்ட் வைத்துள்ளேன்" என்றார்.மனதில் அவநம்பிக்கையுடன் அவரை நான் பார்த்த பொழுது அடுத்த வார்த்தையில் அதிர்ந்து போனேன்."அதிகம் வேண்டாம் மேடம் ஒரு திரீ ஹண்ட்ரட் ருபீஸ் கொடுங்கள் போதும்" என்றாரே பார்க்கலாம்.கையில் இருந்த ஹேண்ட் பேக்கை இறுக்கமாக பிடித்துக்கொண்டு பதில் ஏதுவும் சொல்லாமல் ஓட்டமும் நடையுமாக வீட்டுக்குள் மூச்சிரைக்க ஓடி வந்து விட்டேன்.எப்படி எல்லாம் மனிதர்கள் இருக்கிறார்கள் பாருங்கள்.

Monday, November 15, 2010

ஈதுல் அல்ஹா நல்வாழ்த்துக்கள்

இன்நன்னாளில் அனைவருக்கும் என் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்.குடும்பத்தினருடனும்,நட்புக்களுடனும்,நெருங்கியவர்கள் கூடவும் இன்னாளை சந்தோஷமாக கொண்டாடிட வாழ்த்துகிறேன்.
ஹஜ்ஜுப்பெருநாள் என்றால் புத்தாடை,தக்பீர்,ஈதுதொழுகை,குர்பானி,பெருநாள்
பணம்,கொண்டாட்டம் ,இறைச்சிவகை கலந்த சாப்பாடு குறிப்பாக பிரியாணி என்று நீண்டு
கொண்டே போகும்.ஒரு முறை வித்தியாசமான சாப்பாடு செய்து குடும்பத்தினரை அசத்துங்களேன்.புது வகை குறிப்புகளுக்கு இருக்கவே இருக்கின்றது சமையலில் கொடிகட்டிப்பறக்கும் வலைப்பூ தோழிகளின் குறிப்புகள்.கண்டு மகிழ்ந்த பின் வீட்டில் செய்து உண்டு மகிழ்ந்து பெருநாளை சந்தோஷமாக கொண்டாடுங்கள்.


சிக்கன் பிரைட் ரைஸ்


செஸ்வான் மட்டன் நூடுல்ஸ்

கிரில்ட் சிக்கன்


சிக்கன் லாலிபாப்

சில்லி பிரான்

மட்டன் ரோல்

தந்தூரி சிக்கன்.

Sunday, November 14, 2010

கலெக்டர் மாப்பிள்ளை

மினி சிறுகதை

"மாப்பிள்ளை உயரமும்,உயரத்துக்கேற்ற பருமனும் பார்க்க வாட்டசாட்டமாக இருக்கார்."

"உத்தியோகத்துக்கேற்ற உருவமும் பிளஸ்பாயிண்ட்தானே?"

"பார்க்கின்ற கலெக்டர் உத்தியோகத்தில் சின்ஸியாரிடீன்னா அவ்வளவு சின்ஸியாரிட்டீ."

"அடடா..பதவி இருக்கற இடத்திலே பண்பும் இருந்ததுன்னா இன்னும் சந்தோஷம்தான்"

"ரொம்பவெல்லாம் ஆசைப்படலே.ஒரு அம்பதாயிரம் கேஷா கொடுத்தால் போதும்"

"அதுக்கென்ன?பேஸா கொடுத்துடலாம்"

"ஸ்கூட்டி பெப் ஒன்று போதும்"

"என்னங்க இது..ஆக்சுவலா காரே கேட்கனும் நீங்க.ஆனால் ரொம்ப ஆசைப்படாதவரா இருக்கீங்க.நான் ஒரு அப்பாச்சியையே வாங்கித்தரச் சொல்லுறேன்."

"அது உங்கள் தாராள மனசை காட்டுது.அரைச்சவரனில் ஒரு மோதிரம் போதும்"

"சுண்டுவிரல் பருமனுக்கு செய்ன் தரலாம் என்றிருக்கிறார்.மூத்த மாப்பிள்ளைக்கும் அப்படித்தான் செய்தார்.இருந்தாலும் நீங்க ரொம்ப எளிமையா இருக்கீங்க சார்"

"சீர்வரிசை தட்டெல்லாம் அதிகமா தந்து தடபுடல் படுத்த வேண்டாம்"

"நீங்க வேற..இதெல்லாம் தடபுடல் படுத்தினால் தான் சுற்றத்தார் அவரை மதிப்பார்ன்னு சொல்லிட்டு இருக்கார்"

"கல்யாணம் எல்லாம் ரொம்ப கிராண்டா நடத்தனும்ன்னு இல்லை..ராத்திரி ரிஷப்ஷன்,காலையிலே முகூர்த்தம்..சின்னதா கல்யாணமண்டபம் பிடிச்சால் போதும்"

"என்னங்க இப்படி சொல்லீட்டீங்க..பொண்ணோட தோப்பனார் மேயர் ராமனாதன் மண்டபத்தில் வைத்துத்தான் கல்யாணம் பண்ணனும் என்று சொல்லிட்டு இருக்காரே.அவருக்கும் எக்கசக்க ஆட்கள்.உங்கள் பையன் உத்தியோகத்திற்குத்தகுந்த மாதிரி உங்கள் பக்கம் இருந்தும் ஆட்கள் நிறைய வருவார்கள்.."

"அப்படீங்கறீங்க"

"பையன் எந்த மாவட்டதுலே கலெக்டரா இருக்காருங்க"

"செல் போன் கம்பெனியிலே காஞ்சிபுரமாவட்டதிலே பில் கலெக்டரா இருக்காரு"



Monday, November 8, 2010

என் தந்தை

இங்கே கிளிக் செய்து பாருங்கள்



சிங்கம் என்றால் என் தந்தைதான்
செல்லம் என்றால் என் தந்தை தான்
கண் தூங்கினால் துயில் நீங்கினால்
என் தந்தை தான் என் தந்தை தான்
எல்லோருக்கும் அவர் விந்தை தான்

விண்மீன்கள் கடன் கேட்கும் அவர் கண்ணிலே
வேல் வந்து விளையாடும் அவர் சொல்லிலே
அவர் கொண்ட புகழ் எங்கள் குலம் தாங்குமே
அவர் பேரை சொன்னாலே பகை நீங்குமே
அழியாத உயிர் கொண்ட என் தந்தையே
அழியாத உயிர் கொண்ட என் தந்தையே
ஆண் வடிவில் நீ என்றும் எம் அன்னையே

வீர்த்தின் மகன் என்று விழி சொல்லுமே
வேகத்தின் இனம் என்று நடை சொல்லுமே
நிலையான மனிதன் என வேர் சொல்லுமே
நீதானே அசல் என்று ஊர் சொல்லுமே
உன் போல சிலர் இங்கு உருவாகலாம்
உன் உடல் கொண்ட அசைவுக்கு நிகர் ஆகுமா?

எப்போதும் தோற்காது உன் சேவைதான்
இருந்தாலும் இறந்தாலும் நீ யானைதான்
கண்டங்கள் அரசாலும் கலைமூர்த்தி தான்
கடல் தாண்டி பொருள் ஈட்டும் உன் கீர்த்தி தான்
தலை முறைகள் கடந்தாலும் உன் பேச்சுதான்
தந்தயெனும் மந்திரமே என் மூச்சுதான்

Thursday, November 4, 2010

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

நாளை தீபாவளி கொண்டாடவிருக்கும் பதிவுலக நட்புக்களுக்கு என் இதயம் கனிந்த இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!