அன்பை பலப்படுத்த அன்பளிப்புகளை கொடுத்து வாங்குங்கள் என்பது நபி மொழி.நான் பிளாக் ஆரம்பித்த இந்த ஏழுமாத காலத்திற்குள் இனிய நட்புகள்,நிறைய சகோதர,சகோதரிகள்,அவர்கள் தரும் ஊக்கங்கள் மட்டுமின்றி விருதுகள் தந்து,தொடர் பதிவுகளுக்கும் அழைத்து எழுத்துக்கு ஊக்கமெனும் டானிக்கை தந்து இருக்கின்றனர்.
ஆனால் நான் இதுவரை யாருக்குமே விருதும் தரவில்லை.தொடர்பதிவுகளுக்கும் அழைத்ததில்லை.காரணம் யாருக்கு கொடுக்கலாம்,யாரை அழைக்கலாம் என்று யோசிப்பதற்குள் எனக்கு அறிமுகமான எல்லா பதிவர்களுக்கும் பறிமாறப்பட்டு விடுகின்றது.
வாங்கி,வாங்கி வைத்துக்கொண்டு பேசாமல் இருப்பது முறை அல்லவே?அதனால் நானும் கொடுக்க விழைந்துள்ளேன்.
ம்ம்..யாருக்கு கொடுக்கலாம்?என்ன கொடுக்கலாம்.யோசிக்கயோசிக்க தலையினுள் இருக்கும் வெள்ளைப்பிரதேசம்(அதாங்க..ஏதோ எனக்குள் இருக்கும் சிறிய சைஸ் மூளை) டிரை ஆகிவிடுகின்றது.
சரி ..கொடுக்கலாம் என்று மனம் வைத்தாயிற்று.கொடுத்துடுறேன்.முதலில் ஜெண்டில் மேன் ஃபர்ஸ்ட்.(ஜெண்டில் வுமெண்களுக்கு ஸ்பெஷல் ஆக என் ஐம்பதாவது பதிவில் கொடுக்கறேன்(தாய்குலங்கள் அவசரப்பட்டு சபிச்சிடாதீங்க)
அரசவையில் கோலோச்சிக்கொண்டு இருக்கும் அரசருக்கு மட்டுமா கிரீடம் சொந்தம்?பதிவுலகில் கோலோச்சும் இவர்களுக்கும் கிரீடம் சொந்தம்தான்.எனவே இந்த அழகிய வைரகற்கள் பதிக்கபட்ட பிளாட்டினத்தால் செய்யப்பட்ட கிரீடத்தை சமர்ப்பிகின்றேன்.
1.சகோதரர் ஸ்டார்ஜன்(அமைதிப்புறாவாக பதிவிடுவிடுவதற்காக)
2.சகோதரர் ஜெய்லானி(சிந்திக்கத்தூண்டும் பதிவுகள் மட்டுமின்றி சிரிக்கவைக்கும் பின்னூட்டங்களுக்காக)
3.சகோதரர் ஜமால்(குறிஞ்சிப்பூவாக பதிவிட்டாலும் பதிவர்களுக்கு பின்னூட்டம் இட்டு பிற பதிவர்களின் வளர்ச்சிப்படிகளுக்கு நிற்கும் தூண்களில் ஒன்றாக இருப்பதற்காக)
4.சகோதரர் ஷஃபி(அருமையான ஆக்கங்களை பகிர்ந்து கொண்டதோடு பதிவர்களுக்கு ஜமாலைப்போலவே ஊக்கம் தருவதற்காக)
5சகோதரர் .சீமான்கனி(தொடகட்டுரை,தொடர் கதை போன்று தொடர் கவிதை தந்து கன்னித்தீவு சிந்துபாத் ஆகிக்கொண்டிருப்பதற்காக)
6.சகோதரர் எஸ்.சரவணக்குமார்(மொக்கை,கவுஜை,கலக்கல்,கவிழ்த்தல் என பதிவுலகம் உற்சாக நடைபோடும் வேலையில் தனக்கே உரிய பாணியில் அமைதியாக பதிவிட்டு,பதிலிட்டு வருவதற்காக)
7.சகோதரர் ஷாஜஹான் என்ற மங்குனி அமைச்சர்(மனம் கனத்தால் தியானம் புத்தகம்,இசை,மழலை என்று
இருந்தது போக இவரது இடுகைகளையும்,பின்னூட்டங்களையும் பார்த்து மனங்கள் இலேசாகிப்போவதற்காக)
8.சகோதரர் ஹைஷ்(இவரும் பிரயோஜனமான முறையில் இடுகை இட்டு,சந்தேகங்களை சாந்தமாக தீர்ப்பதற்காக)
9.சகோதரர் வசந்த்(கட்டுரையானாலும் சரி,மொக்கையானாலும் சரி கலக்கிற கலக்கலில் பர்ர்ப்பவர்கள் ஆடிப்போவதற்காக)
10.சகோதரர் நிஜாமுதீன்(இவர் சிரிக்காமலே சிரிக்கவைக்கும் நகைச்சுவைக்காக)
மேற்கண்ட பத்து பேர்களுக்கும் இந்த கிரீடத்தை சமர்ப்பிகின்றேன்.கிரீடத்தை எடுத்து தங்கள் சிரத்தில் அணியா விட்டாலும்,உங்கள் வலைப்பூவின் சிகரத்தில்(உச்சியில்)அணிவிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். கேட்டுக்கொள்கிறேன்.
கிரீடத்திற்கு பொருத்தமானவர்கள் இன்னும் நிறைய சகோதரர்கள் இருந்தாலும் கிரீடம் பெற்றவர்களும் இதனை பகிந்து கொள்ள வேண்டுமென்ற நோக்கில் மேற்கண்ட பத்து பேர்களுக்கும் மட்டும் இக்கிரீடம் வழங்கப்ப்டுகின்றது.நீங்களும் உங்களுக்கு தோன்றியவர்களுக்கு கொடுத்து இந்த கிரீடம் நூறு சிரங்களிலாவது அலங்கரிக்கப்பட வேண்டும்.
குறுகிய காலத்தில் பதிவுலகத்தில் இருந்து கற்றுக்கொண்டது நிறைய..நிறைய.கவுஜை,ஆணிபிடுங்கல்,பொட்டிதட்டுதல்,கொசுவத்தி சுற்றல், மொக்கை எக்ஸ்ட்ரா..எக்ஸ்ட்ரா..என் தலையாய வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு இந்த பாடாகபடுத்தும் பதிவுலகில் எதோ ஒன்று போட்டுக்கொண்டு இருக்கிறேன்.
தவறாது படித்து,தவறாது ஓட்டளித்து,தவறாது பின்னூட்டமிட்டுவரும் நல் உள்ளங்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு இந்த இடத்தில் என் மகிழ்ச்சியையும் சமர்ப்பிக்கின்றேன்.மீண்டும் மீண்டும் தங்களின் நல் ஆதரவை தரும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.(ஆஹ்..வந்துட்டீர்களா ஜெய்லானி சார்!இப்ப என்னதான் சொல்ல வர்ரீங்க?அரசியலில் இறங்க ஐடியா இருக்கான்னு கேட்கவர்ரீங்க.அப்படித்தானே?ஐடியா வந்துச்சுன்னா கண்டிப்பா ஓட்டு கேட்டு வர்ரேன் வெள்ளிகாயினுடன்.மங்குனி ஐயா என்ன வாறு வாறப்போகிறாரோ?அதற்குள்ளே என்னை ஸ்டெடி பண்ணிக்கறேன்.)
டிஸ்கி
(யாரது அங்கே? ஹுசைனம்மாவா?அக்கா..ரொம்ப பில்ட் அப் கொடுக்க்றீங்க ஓவரா இல்லேன்னு முணுமுணுக்கறது..அதிரா.. ஜெனரேட்டர் ஓடுற சப்தம் உங்கள் பக்கமிருந்து வருது.பல்லை ரொம்ப கடிக்காதீங்கோ)