Wednesday, August 18, 2010

வலி


கருவறையில் நிறைந்திருக்கும்

சுமை குறைய

கலங்கி தவித்து அழுது அலறி

கத்தி கதறி மயங்கி துவண்டு

வயிற்றில் சுமந்ததற்காக

உடம்பின் அத்தனை அணுக்களிலும்

வலி சுமந்து

ஜனனத்தில் இருந்து கிட்டாத வலிகளின்

அத்தனை வேதனைகளையும்

ஒரு சேர அனுபவித்து

உடலில் உள்ள அத்தனை சக்திகளையும்

சில கணம் இழந்து

உயிர் போய் உயிர் வந்து

நாடி நரம்பு நெக்குருகி

குருதி எல்லாம் கொதித்துப்போய்

கண்கள் இரண்டும் கழன்று போய்

கருவிழிகள் நிலைத்துப்போய்

மயிர்கால்களெல்லாம் விரைத்துப்போய்

புனர் ஜென்மம் எடுத்தது போல்

புதிய உயிரை பிரசவித்தேன்

வருவோர்க்கெல்லாம் உவகையுடன்

அள்ளி அள்ளி இனிப்பு வழங்கி

இன்முகத்துடன் கூறி மகிழ்கின்றாள்

என் அன்னை "இது சுகபிரசவம்"என்று.

51 comments:

  1. கொடுமை படிப்பதற்கு முன் வட எனக்குத்தான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்..

    ReplyDelete
  2. சூப்பர் கவிதை ஸாதிகா அக்கா. உண்மைதானே..... எத்தனை வலிகள், கொடுமைகளின் பின் கூறுகிறோம் அதனை “சுகப்பிரசவம்” என்று.

    ReplyDelete
  3. கவிதை அருமை.என்னதான் சொன்னாலும் பிள்ளை பிறந்து விழும் பொழுது கிடைக்கும் சுகம் தனி தானே.

    ReplyDelete
  4. எது கொடுமை

    கவிதையும் நல்லாத்தான் இருக்கு

    பெற்றுடுக்கும் கவிதை முன் எதுவும் கொடுமையாக இருக்காது ...

    ( புரிஞ்சிக்க மட்டுமே இயலும் உணர இயலாது எங்களுக்கு )

    ReplyDelete
  5. அருமையாக அழகாக பிரசத்தின் உணர்வினை எழுத்தாக வடித்து இருக்கின்றிங்க...அருமை...

    ReplyDelete
  6. சூப்பர்ர் அக்கா..பெள்ளை பெற்றெடுத்ததும் வலியெல்லாம் எப்படிதான் மறைந்துபோகும்னே தெரியவில்லை..அது ஒருதனி சுகம்தான்..

    ReplyDelete
  7. கவிதைக்கு(?) ஒரு ராயல் சல்யூட் .

    ReplyDelete
  8. என்ன மேடம் திடீர்னு கவிதையில மிரட்றீங்க..

    ReplyDelete
  9. உண்மையிலேயே கஷ்டமான விசயம்தான்.

    அதனாலதான் தாயின் காலடியில் சொர்க்கம் என்றார்கள் நபி (ஸல்) அவர்கள்.

    ReplyDelete
  10. //August 18, 2010
    என்ன கொடுமையடா

    கருவறையில் நிறைந்திருக்கும்
    சுமை குறைய
    கலங்கி தவித்து அழுது அலறி
    கத்தி கதறி மயங்கி துவண்டு
    வயிற்றில் சுமந்த குற்றத்திற்காக
    உடம்பின் அத்தனை அணுக்களிலும்
    வலி சுமந்து
    ஜனனத்தில் இருந்து கிட்டாத வலிகளின்
    அத்தனை கொடுமைகளையும்
    ஒரு சேர அனுபவித்து
    உடலில் உள்ள அத்தனை சக்திகளையும்
    சில கணம் இழந்து
    உயிர் போய் உயிர் வந்து
    நாடி நரம்பு நெக்குருகி
    குருதி எல்லாம் கொதித்துப்போய்
    கண்கள் இரண்டும் கழன்று போய்
    கருவிழிகள் நிலைத்துப்போய்
    மயிர்கால்களெல்லாம் விரைத்துப்போய்
    புனர் ஜென்மம் எடுத்தது போல்//


    உண்மை... என் மனைவியின் முதல் பிரசவத்தில் இதை உணர்ந்தேன். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. பிரசவங்களில் வலியையும் அனுபவித்து, முடியாமல் சிஸேரியனாகி, பின்னர் புண் இன்ஃபெக்‌ஷன் ஆகி, மாதக்கணக்கில் வலியோடு கஷ்டப்பட்டு, பின் விளைவாக தீரா வயிற்றுவலியையும் அனுபவித்து வருபவ(ர்க)ளுக்கு, நிச்சயமாக நீங்கள் சொல்லியிருப்பது “சுகப்பிரசவமே”!! அதுவாவது ஒருநேர வலியோடு போய்விடும். :-(

    ReplyDelete
  12. அருமையான கவிதை.... அத்தனை வலிகளையும் தாங்கி, சுகமாய் மீண்டு வருவதாலோ?
    இன்ட்லியில், இந்த கவிதைக்கு ஓட்டு போட இயலவில்லை. error மெசேஜ் வருது. பிறகு முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  13. கவிதைக்கு வாழ்த்துகள்.. தாய்மையின் உணர்வுகளை சித்தரித்தது அருமையாக உள்ளது.. ஒரு ராயல் சல்யூட்.

    ReplyDelete
  14. எனக்கு தலைப்பு மட்டும் பிடிக்கலை அக்கா...

    ReplyDelete
  15. அக்கா, சூப்பர் கவிதை. உண்மை தான் அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும் வலி.

    ReplyDelete
  16. சூப்பர்..பிரசவ வேதனையை..அப்படியே தெளிவாக கொட்டி இருக்கிறீர்கள்...ஆனால்...

    //என்ன கொடுமையடா!

    பிடிக்கலை...

    //வயிற்றில் சுமந்த குற்றத்திற்காக

    நம் குழந்தையை வயிற்றில் சுமந்ததே குற்றம் என்று எந்த தாயும் நினைக்க மாட்டார் இல்லையா...தவறுதலாக இந்த வரி இடம் பெற்றுவிட்டது என நினைக்கிறேன்...சாரி...

    //ஜனனத்தில் இருந்து கிட்டாத வலிகளின்
    அத்தனை கொடுமைகளையும்

    பிடிக்கலை..

    இந்த வரிகளைத் தவிர்த்துவிட்டு பார்த்தால்..பிள்ளை பெறுவதின் சிரமங்களை அப்படியே உணர வைத்திருக்கிறீர்கள்..வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  17. நன்றி காயத்ரி.

    ReplyDelete
  18. கருத்துக்கு மிக்க நன்றி சகோ ஜமால்.

    ReplyDelete
  19. கருத்துக்கு நன்றி தோழி ஆசியா.

    ReplyDelete
  20. //பிள்ளை பெற்றெடுத்ததும் வலியெல்லாம் எப்படிதான் மறைந்துபோகும்னே தெரியவில்லை..அது ஒருதனி சுகம்தான்//உண்மை வரிகள் மேனகா.மிக்க நன்றி.

    ReplyDelete
  21. நன்றி கீதாஆச்சல்.

    ReplyDelete
  22. ராயல் சல்யூட்டுக்கு மிக்க நன்றி ஜெய்லானி பிரதர்.

    ReplyDelete
  23. முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி கா.க.கா (காயலான்கடை காதர்)பெயர் வித்தியாசமாக பெயரைப்பார்த்ததும் பிளாக் போய் பார்க்கத்தோன்றியது.அப்புறமாக உங்கள் பதிவுகளுக்க்கு பின்னூட்டுகின்றேன்.

    ReplyDelete
  24. //என்ன மேடம் திடீர்னு கவிதையில மிரட்றீங்க.// என்ன ஜெரிசார் இப்படி கேட்டுட்டீங்க.இந்த கவிதை மிரட்டலாகவா இருக்கு?:-(கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  25. கவிதையை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து பின்னூட்டம் கொடுத்த மதுரை சரவணன் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  26. கருத்துக்கு மிக்க நன்றி அக்பர்.

    ReplyDelete
  27. மிக்க நன்றி சித்ரா.மறவாமல் ஓட்டும் போட்டுவிட்டீர்கள்.ஸோ..டபுள் நன்றி.

    ReplyDelete
  28. ஹுசைனம்மா உங்களில் சிலர் பின்னூட்டங்கள் கண்டு எனக்கும் தலைப்பும்,சில வரிகளும் பிடிக்காமல் போய் விட்டது.ஸோ..மாற்றி விட்டேன்.கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  29. தலைப்பை மாற்றிவிட்டேன் சீமான் கனி.ஒகேவா?

    ReplyDelete
  30. ஸ்டார்ஜன் பிரதர் உங்கள் ராயல் சல்யூட்டுக்கும் நன்றி.

    ReplyDelete
  31. ரமேஷ் கருத்துக்கு மிக்க நன்றி.மீண்டும் தலைப்பில் இருந்து ஒரு முறை பாருங்களேன்.

    ReplyDelete
  32. வானதி கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  33. அருமையாய் பிரசவித்தீர் அழகு கவிக்குழந்தை.பிரசவம் என்றுமே பிற சவமே பெண்ணுக்கும் கவிஞனுக்கும்.
    Mohamed Thasthageer(usa)

    ReplyDelete
  34. வலியின் வேகம் கவிதையில் தெரிந்தாலும், ஒரு பெண் தாய் ஆகின்றாள் என்ற வார்த்தை, வலியிலும் ஒரு
    சுகம் தான். இந்த பாக்கியம் கிடைக்காத எத்தனை சகோதரிகள் எவ்வளவு ஏளனத்திற்கு ஆளாகி உள்ளார்கள்.

    ReplyDelete
  35. அனுபவித்து எழுதிருக்கீங்க ஸாதிகாக்கா! அருமை.

    ReplyDelete
  36. //வலியின் வேகம் கவிதையில் தெரிந்தாலும், ஒரு பெண் தாய் ஆகின்றாள் என்ற வார்த்தை, வலியிலும் ஒரு
    சுகம் தான். இந்த பாக்கியம் கிடைக்காத எத்தனை சகோதரிகள் எவ்வளவு ஏளனத்திற்கு ஆளாகி உள்ளார்கள்.//உண்மைதான் இளம் தூயவன்.கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  37. சகோ முஹம்மத் தாஜுதீன் தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  38. //அனுபவித்து எழுதிருக்கீங்க ஸாதிகாக்கா! // :-) மகி ,நானும் தாயானாலும் பிரசவ வலி என்னென்று அறியமாட்டேன்.தூங்கச்செய்து,தட்டி எழுப்பி ஈன்ற குழந்தையை பார்த்ததுதான் என் அனுபவமின்றி இக்கவிதை என் அனுபவம் இல்லை.என் ஆசை என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

    ReplyDelete
  39. தத்ரூபமான ஓவியத்தைப் போல பிரசவ அவஸ்தையை மிகவும் அற்புதமான கவிதையாக்கியுள்ளீர்கள் சகோதரி!.

    ReplyDelete
  40. அருமையான கவிதை...

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  41. //தூங்கச்செய்து,தட்டி எழுப்பி ஈன்ற குழந்தையை பார்த்ததுதான் என் அனுபவம்//

    வார்த்தைகளில் விளையாடிருக்கீங்க!! வாவ்!!

    ReplyDelete
  42. எனக்கு ரெண்டும் சிசேரியன் .ஸாதிகா.. ஆனால் வலியை புரிந்து கொள்ள முடியுது..

    ReplyDelete
  43. அருமையான கவிதை ஸாதிகா. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  44. அருமையான கவிதை; சிந்தித்து உணரவேண்டிய கடைசி வார்த்தை/வரி...

    இக்கவிதையைத் தந்தமைக்கு சகோதரி ஸாதிகாவுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  45. //மாதிரி வாழ்வை பிள்ளைகளுக்கு கொடுங்கள்!// இதைவிட அழகிய முன்னுதாரணங்கள் வேண்டுமா என்ன?

    நன்றி!

    ReplyDelete
  46. //மாதிரி வாழ்வை பிள்ளைகளுக்கு கொடுங்கள்!// இதைவிட அழகிய முன்னுதாரணங்கள் வேண்டுமா என்ன?

    நன்றி!

    ReplyDelete